நமது தேசத்தின் சில அவலங்களை படித்து பாருங்கள் !


* அரிசியின் விலை கிலோ 44 ரூபாய் . ஆனால் சிம் கார்டு இலவசமாக கிடைக்கிறது .
*பொது விநியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் .ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய் .
* வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவீதம் .ஆனால் கல்விக் கடன்களுக்கான வட்டி 12 சதவீதம் .
*பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகதில்கூட ,அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும் ,தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை .
*ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்ககூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் .அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அரபணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை .
*நாம் அணியும் உள்ளாடைகளும் ,ஆடைகளும் ,காலணிகளும் ,குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன .ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன .
*நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன .பாத்திரம் கழுவ உதவும் நீர்க்கலவை இயற்கையான லெமனில் தயாரிக்கப்படுகிறது .
*மொத்தமாக பள்ளிகளையும் ,கல்லூரிகளையும் நடத்தவேண்டிய அரசு சாராயம் விற்றுகொண்டிருக்கிறது .சாராயம் விற்றுகொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .
*கோதுமைக்கு வரியில்லை .அது விலைபொருள் .கோதுமையை மாவாக திரித்தால் வரி உண்டு .கோதுமை மாவை சப்பாத்தியாக செய்தால் வரியில்லை .அதே மாவை பிஸ்கட் கேக் பிரெட்டாக செய்து விற்றால் வரி உண்டு.
*பிரபலமாக வேண்டும் என்ற பிலாசைகள் அனைவருக்கும் உண்டு. அனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பமில்லை .
*குழந்தை தொழிலார்களை ஒழிக்க வேண்டும் என்போம் .அனால் தேநீர்க்கடைகளில் வேலைப் பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக் குடிப்போம் .
இந்த நிலை மாறுவது எப்போது ?
பாரத மாதாவைத்தான் கேட்க வேண்டும்.

நன்றி - விஜயபாரதம் வார இதழ் 14.01.2011