தீவிரமாகும் மத மாற்ற பிரசாரம்


கேள்வி பதில் குமுதம் ஜோதிடம் 
திருமதி. உமா ஆனந்த்,
நுங்கம்பாக்கம், சென்னை.
மேலும் பலர்.


கேள்வி :
 15.1.2011 சனிக்கிழமை அன்று காலை சரியாக 11 மணிக்கு கிறிஸ்தவ மதபோதகர்களான அர்னால்ட் என்பவரும், அவரது மனைவி சோன்ஜா என்பவரும்,அவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்-கொண்டு பலரும் எங்கள் வீட்டிற்கு வந்தனர்.அன்று புனித பொங்கல் தினம் என்பதால், குடும்பத்தினர் அனைவரும் சூரியனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தோம். இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்து, ‘‘நாங்கள் இங்கு உங்கள் நன்மைக்காக ஜெபம் செய்யப்போகிறோம்.நாங்கள் அயனாவரத்தில், 47 பில்கிங்டன் ரோடிலுள்ள ஜெபகூடத்திலிருந்து இங்கு வந்துள்ளோம்’’ என்று கூறி, வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு விட்டார்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி. ‘‘நாங்கள் இந்துக்கள். இன்று எங்கள் பண்டிகை தினம். எங்களுக்கென்று பூஜை நெறிமுறைகள் உள்ளன. உங்கள் ஜெபம் எங்களுக்கு வேண்டியதில்லை. தயவுசெய்து வெளியே போய்விடுங்கள்’’ என்று கூறினோம். ஆனால் அவர்கள் பிடிவாதமாக உட்கார்ந்துகொண்டு அவர்கள் வழியில் ஜெபம் செய்வதைப் போல் நடந்துகொண்டனர். நாங்கள் எவ்வளவோ கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

‘உங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ உங்கள் வீட்டிற்குள் எவ்வித அனுமதியுமின்றி நுழைந்து, அவர்களது மதக்கொள்கைகளின்படி பூஜை செய்கிறார்களா அல்லது வழிபாடு செய்கிறார்களா? நீங்கள் மட்டும் ஏன் இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்?குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளில் அனுமதியின்றி நுழைவதும், வெளியில் செல்ல மறுப்பதும், பலாத்காரம்தான்’ என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் ஜெபம் செய்வதைத் தொடர்ந்ததால் வேறு வழியின்றி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.

காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து,அந்த மத பிரசாரகர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.நாங்கள் புகார் பதிவு செய்துள்ளோம். 

இதே பொங்கல் தினத்தில் நுங்கம்பாக்கத்தின் மற்றொரு பகுதியான திருமூர்த்தி நகர் மற்றும் பெசண்ட் நகர்,அடையாறு பகுதிகளிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடந்துள்ளன.நுங்கம்பாக்கம் பகுதியில் மட்டும் அன்றைய தினம் 30கிறிஸ்தவ மத பிரசார குழுக்களாக அமைத்துக்

கொண்டு,துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும்,இந்து மத நம்பிக்கை-களைப் பழித்துக் கூறியும் பல வீடுகளில் பலாத்காரமாக நுழைந்து, ஜெபம் செய்வதாக கூறி, நிகழ்த்திய நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

மதச்சார்பில்லா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான தீவிர மதமாற்ற முயற்சிகளுக்குத் துணிவு ஏற்பட்டுள்ளதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டுமல்லவா? எவ்விதமாவது இந்திய நாட்டை கிறிஸ்தவ நாடாக மாற்றிவிடும் முயற்சிக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் குவிந்து வருகிறது. இதுபற்றி அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ கவலைப்படவில்லை.

தேசப்பற்று மற்றும் தெய்வப் பற்று ஆகியவற்றின் அவசியத்தைத் துணிவுடன் எடுத்துக் கூறிவரும் தங்கள் பத்திரிகையில் இந்நிகழ்ச்சியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

சென்ற சில மாதங்களாக கிறிஸ்தவ மதமாற்ற போதகர்கள் ஒரு புதுவித பிரசார முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளில் (Residential areas) பல மடங்கு அதிக விலை கொடுத்து ஒரு கட்டடத்தை வாங்கி அதனை வெளிப்பார்வைக்கு Multi Purpose Hall என்று கூறிக்கொண்டு, கிறிஸ்தவ ஜெப வீடுகளாக மாற்றி மதமாற்றம் செய்து வருகின்றனர்.இவ்விதம் செயல்படும் ஜெப வீடுகளில் ஒன்றுதான் அடையாறு தபால் நிலையத்துக்கு அருகில் உள்ள  ‘கார்னர் ஸ்டோன்’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் Multi Purpose Hall ஆகும். 

16.1.2011 மாலை 5.30 மணிக்கு Joy Eternal Indian Church என்று சொல்லிக்கொண்டு ஒரு ஜெபக்கூட்டம் நடந்தது.அதில் இந்துக்களின் பழக்க வழக்கங்கள்,நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசப்பட்டது (Verified with authentic sources who were present at the meeting).

பதில் : பணபலம், அரசியல் கட்சிகளின் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு இந்து சமூகத்தை மற்ற மதத்தினர் அழித்துக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டு வரும் இம்மாபெரும் சமூகம், இந்துக்களாகப் பிறந்து வளர்ந்த அரசியல் தலைவர்கள், இந்துக்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகத் தங்களை விளம்பரப்-படுத்திக்கொள்ளும் கட்சிகள், மடங்கள் ஆகியவை, தங்களுக்கும், கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரகர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நமது சமூகத்தின் கையாலாகாதனத்தை எடுத்துக்காட்டுகிறது.

நாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.மற்ற மதங்களைப் போலவே கிறிஸ்தவ மதத்தையும் மதிக்கிறோம். ஆனால் இந்து மதத்தை அழிக்கும் இத்தகைய தீவிரவாத முயற்சிகளை இனியும் அனுமதிக்க முடியாது. எந்தவொரு இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர்களின் வீடுகளில் நுழைந்து ‘எங்கள் மதம்தான் உயர்ந்தது.உங்கள் வீட்டில் நாங்கள் வழிபாடு செய்வோம்’ என்று கூறுவதில்லை.

இத்தகைய அக்கிரமங்களைக் கண்ட பிறகாவது இந்துக்களுக்குத் தன்மான உணர்ச்சி வருமா? ரத்தத்தில் சிறிதளவாவது
வீர உணர்ச்சி ஏற்படுமா என்று ஏங்குகிறோம்!

நன்றி: குமுதம் ஜோதிடம் 04 /02 /2011