இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் - 6


முந்தைய பகுதிகள்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகள நன்கு பரவியுள்ளது.  காஷ்மீர் மாநிலத்தை மையமாக கொண்டு செயல்பட்ட பல்வேறு அமைப்புகள் காலப் போக்கில் வேறு பெயர்களில் தென்னக மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா கேரள ஆகிய பகுதிகளில் பரவியுள்ளது.
india-terrorismதமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம், கட்சி துவக்கப்பட்ட காலங்களிலிருநதே இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன்  செயல்படுகிறது.  இஸ்லாமியர்கள் மாற்று மதத்தினர் மீதும், தனிநபர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினால் கூட, தாக்குதல்களை கண்டிக்க கூட தயக்கம் காட்டும் கட்சி திமுக வாகும். 1998ம் ஆண்டு பிப்பரவரி மாதம் 14ந் தேதி கோவையில் அத்வானியை கொலை செய்ய நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் கூட, திராவிட இயக்கங்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீதும், அவர்களின் அமைப்பின் மீதும் மென்மையான போக்கையே கடைபிடித்தார்கள்.  திமுகவின் ஸ்தாபகர் சி.என். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவின் போது 2011 வரை சிறையில் இருக்க வேண்டிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை 2008 செப்டம்பர் மாதம் விடுதலை செய்த அரசு திமுக அரசாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியாக கோவையில் சிறையில் இருந்த பக்ரூதின் அலி அகமது உட்பட எட்டு குற்றவாளிகளை விடுவித்து திமுக அரசு.   2006ம் ஆண்டு மே மாதம் இறுதியில் 20க்கு மேற்பட்ட அல் உம்மா அமைப்பைச் சார்ந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தவர்களை திமுக அரசு எவ்வித காரணமும் இல்லாமல் விடுவித்தது.  இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகளை இந்த அரசு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விடுவித்தது.
தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தனித்தனியாக இயக்கங்கள் நடத்தி வந்தார்கள்.  அல்உம்மா, மனித நீதி பாசரை, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், தவ்ஹித் ஜமாத், என்கிற பெயர்களில் தங்களது செயல்பாடுகளi செய்து வந்தார்கள்.   1980க்கு முன் தமிழகத்தில் எந்த விதமான பயங்கரவாத செயல்களும் நடைபெற்றதாக எவ்வித தகவல்களும் கிடையாது.  1980க்கு பின் கோவை, திருநெல்வேலி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு அச்சாரம் போடப்பட்டது.  1997ல் நடந்த தாக்குதல்களுக்கு பழி வாங்கவே அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி, இஸ்லாமிக் டிபன்ஸ் போர்ஸ், மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டாக சேர்ந்து திட்டமிட்ட தாக்குதல் தான் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் நடத்திய தாக்குதாலாகும்.
மனித நீதி பாசறை மற்றும் அல்-உம்மா திட்டமிட்டு நடத்திய தாக்குதல்கள்
சமூக நீதி என்பது முஸ்லீம்களுக்கு எட்டா கனியாகவே இருக்கின்றது. எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் மனித நீதி பாசறை தன் பணியை செவ்வனே செய்து வருகின்றது  என அந்த அமைப்பின் பொறுப்பாளர் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பினார். உண்மையில் நாடு விடுதலை பெற்ற 1947ம் ஆண்டிலிருந்தே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரியும் கட்சிகள் ஓட்டுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கு அதிகரித்து வந்துள்ளது என்பதை மறந்து விட்டு விட்ட செய்தியாகும்.   1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்கு முக்கிய இயக்கம் அல்உம்மா என தெரிந்த பின் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.
coimbatore-blast
அல்உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் தங்களது அமைப்பிற்கு மனித நீதி பாசறை என பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.  தமிழகத்தில் கோவையிலும், தேனியிலும் மனித நீதி பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருந்தது. இந்த இரு மாவட்டங்களும் கேரளத்தின் எல்லையில் இருந்தப் படியால் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கேரளத்தில் உள்ள NDF யிடமிருந்து கிடைத்தன.  2001ல் சிமி தடை செய்யப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பின் பெயரை தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.
26.7.2006ல் மனித நீதி பாசறையில்  புதிதாக  அறிவகம் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பயிற்சி முகாம்கள்  நடத்தப்பட்டன. இந்த பயிற்சி முகாமில்  மத மாற்றத்தின் மூலம் ஜிகாதிகளை அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும், என்பது முக்கிய அம்சமாக கொண்டு  நடத்தப்பட்டது.  22.7.2006ந் தேதி கோவையில் 1998ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் போல் நடத்த திட்டமிட்டதாக மனித நீதி பாசறையை சார்ந்த ஐந்து பேர்களை கோவை காவல் துணை கண்கானிப்பாளர் திரு ரத்தினசபாபதி கைது செய்தார். கைது செய்து சில தினங்களில் மனித நீதி பாசறை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, கைது செய்த துணை ஆணையர் உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.   9.2.2008ல் தமிழக அரசு கோவையில் எவ்வித பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பதற்குறிய அறிகுறி எதுவும் கிடையாது என கூறி ஐந்து பேர்களையும் விடுதலை செய்துவிட்டது.  ஆனால் மத்திய உளவு துறையின் செய்திப்படி  முஸ்லிம் அமைப்பான மனித நீதி பாசறை  ரத்ததானம் செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சிலேட்டு புத்தகம் வழங்குவது போன்றவை ஒருபுறம் வழங்கிக் கொண்டு மறுபுறம் தீவிரவாதப் பயிற்சியை அளிப்பதும், குண்டு தயாரிப்பதும், மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதும் இவர்களின் வாடிக்கை என தங்களது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்கள்.
2006 டிசம்பர் மாதம் தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் மனித நீதி பாசறையை சார்ந்தவர்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சித்த போது தடுத்த செயலுக்காக இந்து முன்னணியின் பொறுப்பாளர் குமார பாண்டியனை 17.12.2006ல் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டார்.  ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பிரச்சினைக்குறிய பகுதியாகும், ஆகவே மேலப்பாளையத்தை மையப் பகுதியாக வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் நடக்கும் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் தஞ்சம் புகும் இடமாக மேலப்பாளையம் விளங்கியது.
மனித நீதி பாசறையில் செயல்படும் இரண்டு முக்கிய அமைப்புகளான அறிவகம், மற்றும்  தமிழ்நாடு டெவலப்மென்ட் பவுண்டேஷன் டிரஸ்ட் என்ற   இந்த இரண்டு அமைப்புகளைப் பற்றி துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்; சஞ்சய் அரோரா தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகும் ‘ மனித நீதி பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதராங்கள் கிடைத்துள்ளன.’ மேலும் இந்த அமைப்பில் உள்ள இரண்டு அமைப்புகளும் மனித நீதி பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகிறது.  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தை கூறி கருத்தை தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்து, மத மாறியவர்களை தேனி மாவட்டத்தில் உள்ள முத்துதேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்பி விடுவது.  அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்கு பயிற்சி எனும் பெயரில் முளை சலவை செய்வது,  1992 டிசம்பர் 6ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவங்களின் சி.டி.யை காட்டுவதும், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்களின் காட்சிகள் அடங்கிய சி.டியை காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது.  நெல்லிக்குப்பத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை நடத்திய போது 15 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் அவர்களிடமிருந்து (long sickles, foreign-made daggers”) along with other items (“celephones…audio and video cassettes, an amplifier, a binocular, a camera, digital diaries) கைப்பற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடத்திய குண்டு வெடிப்பில் காரணமாக 11 பேர்கள் கொல்லப்பட்டதும் அல்உம்மா எனும் பயங்கரவாத அமைப்பின் செயலாகும்.  இதன் காரணமாக தமிழக காவல் துறையினர் பல இடங்களில் தங்களது சோதனைகளை துவங்கிய போது பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைத்தன.  11.3.1997ந் தேதி சென்னைக்கு அருகில் கொடுங்கையூரில் அல்-உம்மா இயக்கத்தை சார்ந்த சிலரது வீடுகளில் சோதனை நடத்திய போது, வெடி குண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஜெல்லட்டின் குச்சிகள், டெட்டேனட்டர்கள், இரும்பு பைப்கள், அலராம் டைம்பீஸ், ஆகியவை கிடைத்தன.  இதன்காரணமாக இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் முகமது கான்  எஸ்.ஏ. பாட்சாவின் சகோதரர், இரண்டமவர் சாகுல் ஹமீது என்பதாகும்.   கைது செய்யப்பட்டாலும் இவர்கள் மீது முறையான வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குறியது.
கொடுங்கையூர் போலவே 8.2.1997ல் தஞ்சாவூருக்கு அருகில் சாலியமங்கலத்தில் இருந்த முகமதியா ரைஸ் மில்லில் குண்டு வெடித்து இருவர் மாண்டார்கள் பலர் காயமடைந்தார்கள்.  இந்த ஆலையில் 84 ஜெலட்டின் குச்சிகள், 50 கிலோ சல்பர், 11.5 கிலோ அமோனியம் நைட்ரேட் ,100 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.  இந்த சம்பவத்தில் அரிசி ஆலை அதிபர் அப்துல் ஹமீதும் அவரது மகன் அப்துல் காதர் இருவரும் படு காயமடைந்தார்கள, படு காயமடைந்த அப்துல் காதருக்கு தமிழகத்தில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக பின்னாளில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது   இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக மதுரை மாவட்டத்தை சார்ந்த அப்துல் குத்தூஸ், அப்துல் சலீம் என்ற இருவரும்  கைது செய்யப்பட்டார்கள்.  இந்த குண்டு வெடிப்பு  சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தமிழக காவல் துறையின் முழுமையான  நடவடிக்கையும்  எடுக்க இயலவில்லை.  குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது அரிசி ஆலை அமைந்துள்ள இடத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.
1997 பிப்ரவரி 10ந் தேதி சென்னைக்கு அருகில் வேப்பேரியில் 1000 டெட்டேனட்ர்கள் ஒரு அட்டைப் பெட்டியில் இருந்ததை குப்பை கூடையில் கண்டு பிடித்தார்கள்.  கோவையிலிருந்து சென்னை வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த அப்துல்லா என்பவன் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டான். இவன் கைது செய்து இரண்டு தினங்களுக்குள் டெட்டேனடர்கள் கண்டு பிடிக்கப்பட்ட அதே இடத்தில் 750 எலக்டிரிக் டெட்டேனட்டர்கள், இத்துடன் வெடி குண்டுகள் தயாரிக்க தேவையான கெமிக்கல்களும் மீன்டும் கண்டு பிடிக்கப்பட்டன.  ஆகவே தொடர்ச்சியாக இம்மாதிரியான சம்பவங்களின் காரணமாக தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த அல்உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டிகள் திட்டமிட்டுள்ளது நன்கு தெரிந்தும் அரசால் எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலவில்லை.
1998ல் கோவையில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பே அதாவது 1981ம் ஆண்டு கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் நடந்த பொது கூட்டத்தில் பேசியதற்காக திருக்கோவிலுர் சுந்தரம் தாக்கப்பட்டார்.  1984ம் ஆண்டு மே மாதம் கோவையில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் முடிந்து பின் திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைவர் நாராயணராவ் உட்பட சிலர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்கள்.  ஆகவே இதை தொடர்ந்து  அல் உம்மா இயக்கத்தின் பொறுப்பாளர் பாட்சா திரு ராமகோபாலன் அவர்களை மதுரை ரயில் நிலையத்தின் தாக்கிய சம்பவமும், முகாம்பிகை மணி, கூடங்குளம் ஜெயராஜ் உட்பட பலர் தொடர்நது இந்த இயக்கத்தினரால் தாக்கப்பட்டார்கள்.  கேரளாவில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்க
30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவர் படு கொலை செய்யப்பட்டார்.  5.9.1991ல் அதே கோவையில் வீர சிவகுமார் என்பவர் படு கொலை செய்யப்பட்டார்.   ஆகவே தொடர்ந்து கோவையில் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெற்ற காரணத்தால் அன்றைய காவல் துறை ஆணையர்களாக இருந்து திரு ஜீ.கணேசன் என்பவரும், துணை கமிஷனராக இருந்து டி.ராதாகிருஷண ராஜாவும்  உடனடியாக கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்தார்கள்.  ஆய்வின் போது பெருமளவில் ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.  இதன் காரணமாக கோட்டை மேடு பகுதியில் 6க்கு அதிகமான செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.
anbazhagan-ramzanஇஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் இருந்த காரணத்தால் 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது திமுகவின் பொறுப்பாளரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கோவை மு.ராமநாதன் பொதுக் கூட்டம் ஒன்றிய பேசியதாவது ‘ திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், வெற்றி செய்தி கிடைக்கும் போதே கோட்டை மேடு பகுதியில் உள்ள செக் போஸ்ட்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் ‘ என பேசினார்.  இந்த பேச்சின் காரணமாக 1996ல் நடந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதே இஸ்லாமிய இளைஞர்கள் செக் போஸ்ட்களை தகர்த்த போது தடுத்த காவலர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார்.  தாக்கப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தில் கோவை சிறையில் வார்டனாக இருந்த பூபாலன் என்பவர் சிறையிலேயே   கொலை செய்யப்பட்டார்.
29.11.1997ந் தேதி கோவை கடைவீதியில் உள்ள காவல் நிலையம் அருகில் வாகனங்களை சோதனை நடத்திக் கொண்டிருந்தவர் சப் இன்ஸ்பெக்டர் எம்.சந்திரசேகரன் என்பவர்.  அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை நடத்திய போது அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் கிடையாது, ஆகவே வாகனத்தில் வந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டார்.  ஆனால் இந்த தகவல் தெரிந்தவுடன் அல் உம்மாவின் மாநில செயலாளர் முகமது அன்சாரி உடனடியாக காவல் நிலைத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தகறாறு செய்து கொண்டு இருந்தார்.  இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு அருகில் போக்குவரத்தை சீர் படுத்திக் கொண்டிருந்த காவலர் செல்வராஜ் மீது மூன்று அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி அவரை படு கொலை செய்தார்கள்.
1997ம் வருடம் டிசம்பர் மாதம் 6ந் தேதி இஸ்லாமியர்கள் பிரச்சினைக்குரிய கட்டிடம் அயோத்தியில் இடிக்கப்பட்ட நாளில் ஏதேனும் ஒரு வழியில் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து காட்டி வருகிறார்கள்.  ஆகவே 1997ம் வருடமும் தங்களது எதிர்ப்பை காட்ட மூன்று எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைத்து வெடிக்க செய்தார்கள். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகளில் குண்டு வெடித்து சிலர் கொல்லப்பட்டார்கள்.  இதே போலவே 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அடியில் குண்டு வைக்கப்பட்டு , குண்டு வெடித்ததில் பலர் படு காயமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள ஜிகாத் கமிட்டி என்பதும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்தவர்கள் நேஷனல் டிபன்ஸ் போர்ஸ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் பயங்கரவாத தாக்குதல் நடக்க கூடிய சூழ் நிலை இருப்பதாக கோவையில் உள்ள காவல் துறையின் உயர் அதிகாரிகள்  ஜனவரி மாதம் 31ந் தேதி முதல்வருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவு எதிர்பார்த்தார்கள்.  ஆனால் திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதால் எவ்விதமான உத்திரவும் கொடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.  இந்த விஷயம் சம்பந்தமாக 19.2.1998ந் தேதி தி ஹிந்து நாளிதழில் “Prior warning not taken seriously” என தலைப்பிட்டு வந்த கட்டுரையே சாட்சியாகும்.
நன்றி:தமிழ் ஹிந்து