யார் செய்த குற்றம்....?

யார் செய்த குற்றம்....?

அகவை ஆறு ஆனதும்......
ஆரம்பப்பள்ளியில்
அடியெடுத்து வைத்தான் ஆறுமுகம்

அங்கே அவனுக்கு...
அலியும் அந்தோணியும்
அறிமுகம் ஆனார்கள்

வறுமை அவர்களை வாட்டிய போதும்
தம் மன வலிமையினால் 
வறுமையின் வலியினை 
வெறுமையாக்கினர் அவர்கள்

வீதி வரை மட்டுமே வந்த 
அவர்களின் நட்பு
வீடு வரைக்கும் விரிவடைந்தது-பின்
குழந்தைகளின் நட்பு 
குடும்பங்களின் நட்பாய் மாறியது

அறியா வயதில் ஆரம்பித்து 
அகம் கொண்ட அவர்கள் நட்பு
அகவை பல கடந்து
ஆலமரமாய் ஆழ வேரூன்றியது

ஆரம்பபள்ளியில் ஆரம்பித்து
மேல்நிலைப்பள்ளி வரை
ஒன்றாய் ஒரேப் பள்ளியில் பயின்றனர்

மேல்நிலைக் கல்வி முடிந்து 
உயர் படிப்பிற்கும் ஒன்றாய் 
பயணிக்க முற்ப்பட்டனர்....

காசு இருந்தால் தான் 
கல்லூரிகளில் கால் வைக்க முடியும்
எனும் நிலைமை இங்கிருக்க
பாவம் இவர்களோ அரைப்பட்டினிகள்
காசு இல்லாமல்...
காளையர் மூவரும் கலங்கினர்

ஒரு நாள் காலைப் பொழுதியில்
அலியும் அந்தோணியும் அரக்கப்பரக்க
ஆறுமுகம் வீட்டிற்கு வந்தனர்

எலேய் ஆறுமுகம் நம்ம படிப்பிற்கு 
அரசாங்கம் கசு தருதாம்
நாமும் இனி கல்லூரிக்கு போகலாம்
சந்தோசத்தால் திக்குமுக்காடினர் மூவரும்

எட்டாதோ என நினைத்த 
மேற்படிப்பு எட்டி விட்டது என்ற
மகிழ்ச்சியில் திளைத்தனர் மூவரும்

கல்லூரிக் கனவுகளோடு 
காளையர் மூவரும் தன் தகப்பன்களோடு
ஊருக்கு வேளியே உள்ளக்கல்லூரிக்கு
விண்ணப்பிக்க ஒன்றாய் போனார்கள்

அலியையும் அந்தோணியையும்
தனியாக அழைத்த கல்லூரி நிர்வாகம்
ஆறுமுகத்தை கண்டுகொள்ளவே இல்லை
ஆறுமுகத்தின் அப்பா ஆவல் மிகுதியால்
அதிகாரியை அனுகினார்...

அதிகாரியோ.....
ஆறுமுகத்தின் அப்பாவிடம் சொன்னார்
மன்னிச்சிடுங்க....
எங்களால ஓண்ணும் செய்ய முடியாது
அலிக்கும் அந்தோணிக்கும் தான்
கல்விக்கட்டணம் தருவதா 
கட்டளை போட்டிருக்கிறது அரசாங்கம்

அதிர்ந்தே போனான் ஆறுமுகம்...ஆனாலும்
அப்பாவியாய் அதிகாரிகளிடம் கேட்டான் 
எங்கள் மூவரின்...
மதிப்பெண்களும் பொருளாதர சூழ்நிலையும்
ஒன்றாய் இருக்க எனக்கு மட்டும்
கல்விக்கட்டணம் ஏன் தரதாம் அரசாங்கம் 

காரணம் தெரிந்ததும்...
கலங்கிபோனான் ஆறுமுகம்
ஏழையாய் பிறந்தது என் குற்றமா...
கலங்கிய கண்களோடு
அப்பாவியாய் தன் அப்பாவிடம் கேட்டான்

இல்லை மகனே...
ஏழையாய் பிறந்தது உன் குற்றமில்லை
இந்த ஏழை இந்துவுக்கு...
மகனாய் பிறந்தாய் அது தான் 
நீ செய்த குற்றம்

ஆறுமுகத்துக்கு....
அடி மனதில் ஒரு கேள்வி
என்னைப் போன்ற மாணவர்கள்
மத்தியில் மனிதத்தைப் பார்க்காமல்
மதம் பார்த்து ஏன் சலுகை வழங்குகிறது
மதிக்கெட்ட இந்த அரசாங்கம்

ஆனாலும் பரவாயில்லை
எனக்கு கிடைக்காத கல்வி 
என் நண்பர்களுக்காவது கிடைக்கிறதே
என ஆறுதல் அடைந்தான் ஆறுமுகம்

இது என்னுடைய கேள்வி
நாம் இந்த ஆறுமுகங்களின்
கண்ணீருக்கு என்ன கைமாறு
செய்யப்போகிறோம் அல்லது 
ஆறுமுகங்கள்....
அலியாகவோ அந்தோணியாகவோ மாறவேண்டுமா
பதில் சொல்லுங்கள் தமிழ் கூறும் நல்லுலகமே....