ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியம் பாராட்டுக்குரியது




‘மராத்தியர்களின் மாநிலமாகிய மும்பையில் வட இந்தியர்களுக்கு இடமில்லை; வேலைவாய்ப்புகள் தரப்படக் கூடாது...’ என்றெல்லாம் பேசி, சட்ட விரோதமாக ஒரு துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிற ராஜ்தாக்கரேயை, மஹாராஷ்ட்ர அரசு கடுமையுடன் அணுகவில்லை. ராஜ்தாக்கரே, சிவசேனையின் ஓட்டைப் பிளப்பார் என்பதாலும், அவர் பாதையில் குறுக்கிட்டால், மாநில வெறி ஓட்டுக்களில் சரிவு ஏற்படலாம் என்பதாலும், மஹாராஷ்ட்ர மாநில காங்கிரஸ் அரசு, அவருடைய அட்டூழியங்களை அனுமதித்தே வந்தது.

தனது ஓட்டை ராஜ்தாக்கரே பாதிக்கிறாரே என்கிற கோபத்தில், அவரைவிடத் தீவிரமாக சிவசேனை தனது பழைய பாணியில் பேச ஆரம்பித்தது. பார்த்தது காங்கிரஸ் அரசு; மாநில வெறி ஜோதியில் கலந்தது. மராத்தி மொழி தெரிந்தவர்களுக்குத்தான் மும்பையில் டாக்ஸி ஓட்ட அனுமதி – என்று அறிவித்தது. இதற்கு பீஹார் போன்ற மாநிலங்களில் பலத்த எதிர்ப்புக் கிளம்ப, ‘ஹிந்தி, குஜராத்தி’ தெரிந்தாலும் போதும் – என்று முதல்வர் திருத்தல் அறிக்கை வெளியிட்டார்.

இப்படி மாநில வெறியை ராஜ்தாக்கரே கட்சியும், பால்தாக்கரே கட்சியும் கொஞ்சமும் கூசாமல் கிளப்பி விட்டுக் கொண்டிருக்க, எந்தக் கட்சியுமே அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயங்கி வந்தன. டெண்டுல்கர், ‘மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்’ என்று கூற, மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சில குரல்கள் அதையே எதிரொலிக்க – அவர்களையும் மிரட்டியது மாநில வெறிக் கூட்டம். அந்த நிலையில் கூட, அரசியல் கட்சிகள் தாக்கரேக்களின் துவேஷப் பிரச்சாரத்தை நேரடியாக எதிர்கொள்ளத் தயங்கின.

இந்தக் கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘மும்பையில் வட இந்தியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாதுகாப்பு அளிக்கும்’ என்று அறிக்கை விட்டதுடன் நில்லாமல், மும்பையில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால், அவர்களுக்குப் பாதுகாப்பு தருமாறு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு உத்திரவும் இட்டார்.

உடனே பத்திரிகைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பாராட்டவில்லை. ‘ஹோ! இதனால் பா.ஜ.க.விற்கு தர்மசங்கடம். சிவசேனைக் கூட்டு என்ன ஆவது?’ என்று கேலி செய்தன. பா.ஜ.க. தலைவரோ, ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும், எல்லா இந்தியர்களுக்கும் உரிமை உண்டு என்பதே பா.ஜ.க.வின் நிலை’ என்று அறிக்கை வெளியிட்டார். பத்திரிகைகளால் இதையும் ஜீரணிக்க முடியவில்லை. ‘உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற ஹிந்தி பேசுகிற மாநிலங் களில், ஓட்டு இழப்பு ஏற்படக் கூடாதே என்ற பயத்தில், பா.ஜ.க. இப்படிப் பேசுகிறது’ என்று விமர்சனம் செய்யப்பட்டது.

ஆனால், இதையெல்லாம் அடுத்து, பலர் எதிர்த்தாகி விட்டது என்ற நிலையில் – ராகுல் காந்தி, மும்பை பற்றியும், மஹாராஷ்ட்ரம் பற்றியும் பேசி, மாநில வெறியைக் கண்டித்தார். பத்திரிகைகள் பாராட்டி மகிழ்ந்தன. இன்னமும் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. ‘இது, உத்திரப் பிரதேச ஓட்டுக்காக’ என்று பத்திரிகைகள் விமர்சிக்கவில்லை. ராகுலைத் தொடர்ந்து, சிதம்பரம் உட்பட பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள், தாக்கரேக்களின் பிரச்சாரத்தைக் கண்டிக்கத் தொடங்கி விட்டனர். காங்கிரஸின் ‘தேசியப் பார்வை’ உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

ஆனால், இந்த ‘தேசிய’ அணுகுமுறை தைரியமாக வெளிப்பட்டதற்கு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தெளிவான அணுகுமுறைதான் காரணம் என்பதை, யாரும் சுட்டிக்காட்டுவதாகத் தெரியவில்லை. அதுவரை தயங்கி வந்த கட்சிகள் – பா.ஜ.க. உட்பட– உறுதியாக தேசியம் பேசியது, ஆர்.எஸ்.எஸ். பேச்சுக்குப் பின்னர்தான். ராகுல் காந்தி, சிதம்பரம் உட்பட, மாநில வெறிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் அறிவிப்பிற்குப் பிறகுதான். மத்திய – மாநில அரசுகள் உட்பட அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தபோது, தெளிவான நிலையை அறிவித்த, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியம் பாராட்டுக்குரியது. 
ராத்தியர்களின் மாநிலமாகிய மும்பையில் வட இந்தியர்களுக்கு இடமில்லை; வேலைவாய்ப்புகள் தரப்படக் கூடாது...’ என்றெல்லாம் பேசி, சட்ட விரோதமாக ஒரு துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிற ராஜ்தாக்கரேயை, மஹாராஷ்ட்ர அரசு கடுமையுடன் அணுகவில்லை. ராஜ்தாக்கரே, சிவசேனையின் ஓட்டைப் பிளப்பார் என்பதாலும், அவர் பாதையில் குறுக்கிட்டால், மாநில வெறி ஓட்டுக்களில் சரிவு ஏற்படலாம் என்பதாலும், மஹாராஷ்ட்ர மாநில காங்கிரஸ் அரசு, அவருடைய அட்டூழியங்களை அனுமதித்தே வந்தது. 

தனது ஓட்டை ராஜ்தாக்கரே பாதிக்கிறாரே என்கிற கோபத்தில், அவரைவிடத் தீவிரமாக சிவசேனை தனது பழைய பாணியில் பேச ஆரம்பித்தது. பார்த்தது காங்கிரஸ் அரசு; மாநில வெறி ஜோதியில் கலந்தது. மராத்தி மொழி தெரிந்தவர்களுக்குத்தான் மும்பையில் டாக்ஸி ஓட்ட அனுமதி – என்று அறிவித்தது. இதற்கு பீஹார் போன்ற மாநிலங்களில் பலத்த எதிர்ப்புக் கிளம்ப, ‘ஹிந்தி, குஜராத்தி’ தெரிந்தாலும் போதும் – என்று முதல்வர் திருத்தல் அறிக்கை வெளியிட்டார். 

இப்படி மாநில வெறியை ராஜ்தாக்கரே கட்சியும், பால்தாக்கரே கட்சியும் கொஞ்சமும் கூசாமல் கிளப்பி விட்டுக் கொண்டிருக்க, எந்தக் கட்சியுமே அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயங்கி வந்தன. டெண்டுல்கர், ‘மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்’ என்று கூற, மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சில குரல்கள் அதையே எதிரொலிக்க – அவர்களையும் மிரட்டியது மாநில வெறிக் கூட்டம். அந்த நிலையில் கூட, அரசியல் கட்சிகள் தாக்கரேக்களின் துவேஷப் பிரச்சாரத்தை நேரடியாக எதிர்கொள்ளத் தயங்கின. 

இந்தக் கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘மும்பையில் வட இந்தியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாதுகாப்பு அளிக்கும்’ என்று அறிக்கை விட்டதுடன் நில்லாமல், மும்பையில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால், அவர்களுக்குப் பாதுகாப்பு தருமாறு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு உத்திரவும் இட்டார். 

உடனே பத்திரிகைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பாராட்டவில்லை. ‘ஹோ! இதனால் பா.ஜ.க.விற்கு தர்மசங்கடம். சிவசேனைக் கூட்டு என்ன ஆவது?’ என்று கேலி செய்தன. பா.ஜ.க. தலைவரோ, ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும், எல்லா இந்தியர்களுக்கும் உரிமை உண்டு என்பதே பா.ஜ.க.வின் நிலை’ என்று அறிக்கை வெளியிட்டார். பத்திரிகைகளால் இதையும் ஜீரணிக்க முடியவில்லை. ‘உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற ஹிந்தி பேசுகிற மாநிலங் களில், ஓட்டு இழப்பு ஏற்படக் கூடாதே என்ற பயத்தில், பா.ஜ.க. இப்படிப் பேசுகிறது’ என்று விமர்சனம் செய்யப்பட்டது. 

ஆனால், இதையெல்லாம் அடுத்து, பலர் எதிர்த்தாகி விட்டது என்ற நிலையில் – ராகுல் காந்தி, மும்பை பற்றியும், மஹாராஷ்ட்ரம் பற்றியும் பேசி, மாநில வெறியைக் கண்டித்தார். பத்திரிகைகள் பாராட்டி மகிழ்ந்தன. இன்னமும் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. ‘இது, உத்திரப் பிரதேச ஓட்டுக்காக’ என்று பத்திரிகைகள் விமர்சிக்கவில்லை. ராகுலைத் தொடர்ந்து, சிதம்பரம் உட்பட பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள், தாக்கரேக்களின் பிரச்சாரத்தைக் கண்டிக்கத் தொடங்கி விட்டனர். காங்கிரஸின் ‘தேசியப் பார்வை’ உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 

ஆனால், இந்த ‘தேசிய’ அணுகுமுறை தைரியமாக வெளிப்பட்டதற்கு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தெளிவான அணுகுமுறைதான் காரணம் என்பதை, யாரும் சுட்டிக்காட்டுவதாகத் தெரியவில்லை. அதுவரை தயங்கி வந்த கட்சிகள் – பா.ஜ.க. உட்பட– உறுதியாக தேசியம் பேசியது, ஆர்.எஸ்.எஸ். பேச்சுக்குப் பின்னர்தான். ராகுல் காந்தி, சிதம்பரம் உட்பட, மாநில வெறிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் அறிவிப்பிற்குப் பிறகுதான். மத்திய – மாநில அரசுகள் உட்பட அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தபோது, தெளிவான நிலையை அறிவித்த, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியம் பாராட்டுக்குரியது.