தமிழகத்தின் காஷ்மீர் - முத்துப்பேட்டை


தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்களிடம் தமிழகத்தின் காஷ்மீர் எது என்று கேட்டால் சட்டென்று முத்துப்பேட்டை என்று சொல்லி விடுவார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியான முத்துப்பேட்டை, எப்போதும் போர்க்களம் போல் இருக்கிறது. முத்துப்பேட்டை, காஷ்மீர் என்றால் அதற்கு அருகில் உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி ஜம்மு போல இருக்கிறது. இரண்டு ஊரையும் பிரிக்கும் கோரையாறு இந்தப் போர்க்களத்திற்குச் சாட்சியாக மெல்ல சலசலத்துக் கொண்டிருக்கிறது. முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் மிகப்பெரிய தர்கா உள்ளது. நாகூர், ஏர்வாடிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தர்கா இதுதானாம். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் சந்தனக்கூடு விழா, அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இந்த சந்தனக்கூடு ஊர்வலமும், முஸ்லிம்களின் சுன்னத் ஊர்வலமும் ஹிந்துக்களின் கோயில் வழியாகவும், ஹிந்துக்களின் தெரு வழியாகவும் சர்வசாதாரணமாய் செல்கிறது. முத்துப்பேட்டையில் மிகப்பெரிய 13 மசூதிகள் உள்ளன. இந்த மசூதிகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தும் ராமேஸ்வரம் கோயிலுக்கு ஹிந்துக்களால் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட சொத்துக்கள் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.


இங்கும் சுன்னத் ஊர்வலம் உள்ளிட்ட முஸ்லிம்களின் மத ஊர்வலங்கள், ஹிந்துக்களின் கோயில்கள் மற்றும் தெருக்களின் வழியாகச் செல்கிறது. ஹிந்துக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடையில் ஹிந்துக்களின் வீட்டில் விசேஷம் என்றால் முஸ்லிம் சமையல்காரர்களைக் கொண்டே அசைவம் சமைக்கிறார்கள். முஸ்லிம் சமையல்காரர்கள் சமைக்கவில்லை என்றால், அவர்கள் சாப்பிட மாட்டார்களாம். முத்துப்பேட்டை லயன்ஸ் கிளப்பில் ஓரிரு முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஓரிருவருக்காக லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் சமையல்காரரைக் கொண்டுதான் சமைக்கிறார்கள்.

இப்படி ஹிந்துக்கள் எல்லா விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், முஸ்லிம்கள் ஹிந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்துகின்றனர். 1990ல் இங்கு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் காலூன்றியவுடன் ஹிந்துக்களின் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. அதன் பிறகுதான் ஹிந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாகக் கொண்டாட ஆரம்பித்தனர். முஸ்லிம்களின் ஊர்வலங்கள் ஹிந்துக்களின் கோயில்கள் வழியாக தடையின்றிச் செல்கிறது. ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் தடுக்கின்றனர். காவல்துறையும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே ஒவ்வொரு வருடமும் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் உள்ளூர் இந்துக்கள்.

2002ல் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கலந்து கொண்டார். அப்போது ஒரு முஸ்லிம் அரவாணியின் கைகளை முஸ்லிம்களே வெட்டி அந்த ரத்தத்தில், `ஓம் காளி, ஜெய் காளி' என்று எழுதி அந்தப் பழியை ஹிந்துக்கள்மீது போடப் பார்த்துள்ளனர். உண்மையை போலீசார் கண்டுபிடித்ததால் முஸ்லிம்களின் சதித்திட்டம் அம்பலமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டை மசூதியில் சாக்கடை தோண்டியபோது மூன்று குண்டுகள் வெடித்தது. போலீசாரின் உதவியுடன் இந்தச் செய்தியை மூடிமறைத்து விட்டனர். `முத்துப் பேட்டை மசூதியில் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன' என்பதற்கு இது ஆதாரம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.முத்துப்பேட்டையில் இப் போது செருப்புக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுடன் தொடர்பிருப்பதாக சில போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.இந்த நபர் லண்டனில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர்.




ஒவ்வொரு வருடமும் கடும் போராட்டங்களுக்கிடையே, போலீஸ் படைகளுக்கு மத்தியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் நடக்கிறது. விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துவிட்டு திரும்பும்போது ஹிந்துக்களின்மீது முஸ்லிம் குண்டர்கள் கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசுவது வழக்கமாக நடக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு விநாயகர் சிலைகளைக் கரைத்துவிட்டு திரும்பும்போதும் இதுபோல முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதனால் கொதித்தெழுந்த ஹிந்துக்கள் அன்றைய தினமே தாக்குதல் நடத்திய முஸ்லிம்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசிடம் ஊர்வலமாகச் சென்று புகார் மனு கொடுத்தனர்.

ஹிந்துக்களின் புகார் மனுவுக்குப் போட்டியாக, மறுநாள் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக வந்து ஹிந்துக்கள்மீது போலீசில் புகார் கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் ஹிந்து தெய்வங்கள் மற்றும் உள்ளூர் ஹிந்துப் பெரியவர்கள் பற்றி ஆபாசமாகக் கோஷமிட்டுள்ளனர்.

முத்துப்பேட்டையில் ஹிந்துக்களுக்கு எதிரான கும்பலுக்கு தலைமை வகிக்கும் பொட்டை பஷீர் என்பவன், பல நேரங்களில் எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் காரில் பகிரங்கமாக உலா வருவானாம். இந்த பொட்டை பஷீர் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொட்டை பஷீர் கைதானதால் கோபமடைந்த முஸ்லிம்கள், ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் பா.ஜ.கவின் மாவட்டச் செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான கருப்பு என்கிற முருகானந்தத்தையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.


ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக கலவரங்களைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் எத்தனை முஸ்லிம்களை கைது செய்கிறார்களோ, அதே எண்ணிக்கையில் ஹிந்துக்களையும் போலீசார் கைது செய்கின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஹிந்து இளைஞர் ஒருவரை முஸ்லிம்கள் வெட்டி விட்டனர். இதற்காக முஸ்லிம்களில் 32 பேரை கைது செய்த போலீசார், 32 ஹிந்துக்களையும் கைது செய்தனர்.

மிகப்பெரிய பயங்கரவாதியான பொட்டை பஷீரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், அப்பாவியான மகேஷ் என்ற 28 வயது இளைஞரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். எந்தத் தவறும் செய்யாத இந்த அப்பாவி இளைஞர், கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முத்துப்பேட்டையில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் அமைப்புகளின் போஸ்டர்களும், `உணர்வு', `மக்கள் உரிமை' போன்ற முஸ்லிம் பத்திரிகைகளின் விளம்பரப் போஸ்டர்களுமே கண்ணில் படுகின்றன. கடந்த 2005ம் ஆண்டு பொட்டை பஷீர் தலைமையில் முஸ்லிம்கள் , `12-09-05 அன்று நடக்கவிருக்கும் விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்த விடக்கூடாது. முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களுக்கு நிகராக ஹிந்துக்களை வாழவிடக் கூடாது. இஸ்லாமியர்களின் கொள்கை களுக்கும், நடவடிக்கைகளுக்கும் இடையூறாக இருக்கும் எந்த மதத்தினரையும் உயிருடன் வாழவிடக் கூடாது. இஸ்லாமிய இனத்தையும், மதத்தையும் காப்பாற்ற ஒவ்வொரு இஸ்லாமியனும் ரத்தம் சிந்தத் தயங்கக் கூடாது. இந்த நாடு துண்டானாலும் கவலை இல்லை' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அதோடு இந்த உறுதிமொழியைத் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து முஸ்லிம் களிடம் விநியோகித்துள்ளனர்.

எப்படியாவது விநாயகர் ஊர்வலத்தைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக கடந்த 2005ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம் விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இந்த ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தைத் தடுக்க பல வழிகளில் முஸ்லிம்கள் முயன்று வருகின்றனர். விநாயகர் சிலைகளை அந்தந்த ஊரிலேயே கரைக்க வேண்டும், ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்று ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள முத்துப்பேட்டை பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டு வாழ்க்கைப் படகை நகர்த்திக் கொண்டு வருகிறார்கள் முத்துப்பேட்டை ஹிந்துக்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் போராடி வருகிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை.